இந்த நிலையில், 46 நாட்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, சபரிமலை கோவிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஐயப்பன் சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்டல பூஜை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வெளியேறும் வாசலை எப்போதும் திறந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பக்தர்களுக்கான கூடாரங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே தங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நெரிசல் இல்லாமல் சுமுகமாக பக்தர்கள் செல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.