நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (14:17 IST)
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள்.
 
இதனால், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையும் அமளி நிலவுகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் உளவு செயலியைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும், விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்குக் காரணமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனிடையே வரிவிதிப்பு திருத்தச்சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்