ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல...மக்களை ஏமாற்றும் செயல் -மம்தா பானர்ஜி

சனி, 20 மே 2023 (14:06 IST)
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த   நிலையில், மேற்கு வங்க முதல்வர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.   கறுப்பு பணத்தை  ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதற்கு   நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல்வாதிகள் , எதிர்க்கட்சி தலைவர்கள்  கருத்துக்கள்  கூறி வருகின்றனர். இந்த நிலையில்,  மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறியுள்ளதாவது:

''பணமிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை….அந்த கஷ்டத்திற்குக் காரணமானவர்ளை மன்னிக்கக்கூடாது.  ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகையன்று , அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்…மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ''என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்