இந்தியாவின் 66 ஆவது குடியரசு தின விழா இன்று நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதாற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிட்செல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்றார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.