மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு : ரேசன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி...

வியாழன், 17 மார்ச் 2022 (19:17 IST)
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ரேசனில் பொருட்களை வாங்குவதற்கு  குடும்ப அட்டை கட்டாயம் என்ற நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வீடு மாறி இருந்தாலோ ஊர் மாறி இருந்தாலோ அல்லது மாநிலம்  மாறிச் சென்றாலும் இனிமேல் புதிய ரேசன்  கார்டு வாங்கக்த் தேவையில்லை என்றும், ரேசன் பொருட்கள் வாங்குவதற்குப் புதிய ரேசன் கார்டு தேவையில்லை எனவும், பொதுமக்கள் தாங்கள் இடம் மாறிச் செல்லும் இடத்தில்  தங்களின் ஆதார் எண்ணை அல்லது ரேசன் கார்டு அட்டை எண்ணை மட்டும் கொடுத்து ரேசன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்  மத்திய அமைச்சசர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்