ரயில்வே பட்ஜெட்: ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த அன்னிய முதலீடு தேவை - சதானந்த கௌடா

செவ்வாய், 8 ஜூலை 2014 (12:40 IST)
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா நாடாளுமன்றத்தில் 2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த அன்னிய முதலீடு தேவை என்று கூறினார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு மத்திய அரசு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் இது.

தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள சதானந்த கௌடா, ரயில்வே துறை ஒவ்வொரு ஒரு ரூபாயையும் சம்பாதிக்க 94 பைசாக்களை செலவிடுவதாகக் கூறினார்.

ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த அன்னிய முதலீடு தேவை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்