கொரோனா குறித்து இன்னும் பிரதமருக்கு புரியவே இல்லை: ராகுல்காந்தி

வெள்ளி, 28 மே 2021 (15:31 IST)
கொரனோ வைரஸ் என்றால் இன்னும் பிரதமர் மோடிக்கு புரியவே இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரனோவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக ஏற்கனவே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன
 
குறிப்பாக தினந்தோறும் ராகுல் காந்தி மத்திய அரசின் நடவடிக்கைகளை குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் கொரனோ பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு பலமுறை எச்சரித்துள்ளோம் என்றும் குறித்து பிரதமருக்கு இன்னும் புரியவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் விகிதத்தை மத்திய அரசு மூடி மறைக்கின்றது என்றும் அவர் கடும் குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்