அன்பான நண்பரை இழந்துள்ளேன்..!! மறைந்த விஜயகாந்த் குறித்து பிரதமர் உருக்கம்..!!!

புதன், 3 ஜனவரி 2024 (13:16 IST)
எனது அன்பான நண்பரை இழந்து விட்டதாக மறைந்த விஜயகாந்த் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 
கடந்த 28 ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி,  நடிப்பிலும் சரி, அரசியலிலும் சரி, தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தவர் விஜயகாந்த் எனவும் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார் எனவும் புகழாரம் சூட்டினார். 
ALSO READ: ஆளுநர் செல்லும் வழியில் தீக்குளித்த முதியவர் பலி..!!
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்
 
ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன் எனவும் கேப்டன் குறித்த சில கருத்துக்களையும், அவரது சிறப்புகளையும் எழுதியிருக்கிறேன் எனவும் குறிப்பிட்டு, கட்டுரை ஒன்றையும் பிரதமர் மோடி எழுதி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்