4 ரூபாய் வரை உயரப்போகும் பெட்ரோல் விலை

வியாழன், 17 மே 2018 (16:00 IST)
கர்நாடக சட்டசபை தேர்தலால் உயர்த்தப்படாத பெட்ரோல் டீசல் விலை தற்பொழுது உயர உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள், மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
 
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.50 காசும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்