பிரபல தனியார் சேனலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் : பிரிட்டன் அரசு அதிரடி உத்தரவு

புதன், 23 டிசம்பர் 2020 (16:54 IST)
இந்தியாவில் குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சேனலாக உருவெடுத்துள்ள அர்னாப் கோஸ்வாமிக்கு ரூ.20 அபராதம் விதித்துள்ளது பிரிட்டன் அரசு.

இந்தியாவின் முன்னணி ஊடகவிலாளர்களின் முக்கியமானவர் அர்னாப் கோஸ்வாமி. இவரது விவாத நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. ஆனால் இதில் பங்கேற்பவர்களைப் பேசவிடாமல் தடுப்பதாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.

இந்நிலையில், இவருடைய சமீபத்தில் விவாத நிகழ்ச்சியில், நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர் என பேசியிருந்தார். இது பலத்தை சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

எனவே அர்னாப் கோஸ்வாமிக்கும், ரிபப்ளிக் டிவிக்கும் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்