நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல்: என்கவுன்டரில் சுட்டுத்தள்ளிய போலீஸ்!

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:33 IST)
நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்க முயன்ற கும்பலை காவல்துறையினர் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் என்ற மாவட்டத்தில் முத்தூட் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் போல் திடீரென 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் முத்தூட் ஊழியர்களை பிணைக் கைதியாக வைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர் 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கியால் என்கவுண்டர் செய்தனர். இதில் ஒரு கொள்ளையன் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்