ஆனால், இன்று அந்த தளத்தில் எந்தவித சேதமும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்கள் முழுமையாக பொய்யெனவும், அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது உறுதியெனவும் தெளிவாகியுள்ளது.
மேலும், இந்தியாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டோம் என பாகிஸ்தான் கூறிய நிலையில், அதே பின்புலத்தில் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து பகிர்ந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அத்துடன், சீனாவின் ஏவுகணைகளை வைத்து இந்தியாவை தாக்க முயன்ற பாகிஸ்தானால் சிறிய சேதத்தை கூட ஏற்படுத்த முடியாத நிலை, இரு நாடுகளுக்கும் பெரும் அவமானமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.