ராகுல் காந்தியின் பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட்டுகள்! போலீசார் அதிர்ச்சி!

செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (16:07 IST)
ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பிக்பாக்கெட் நபர்கள் புகுந்து உள்ளதாக போலிசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது 
 
கடந்த 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இப்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த பாதயாத்திரை சென்ற பகுதியில் பிக்பாக்கெட் சம்பவங்கள் அதிகமாக அதிகமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றம் நடந்த இடங்களில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் யாத்திரையில் பங்கேற்க வில்லை என்பதும் கூறப்படுகிறது
 
பிக்பாக்கெட் சம்பவங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடை பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்