கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களுக்கு தடை

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:02 IST)
கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போல இந்த முறையும் 2 ஆம் ஆண்டாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 கடன் வழங்கவுள்ளது கேரள அரசு.

இந்த கடன் தொகையை 5 தவணையாக திருப்பி செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் குமரியில் ஓணம் பண்டிகை ஆரம்பிப்பதை ஒட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்