2 ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை: மும்பை மக்கள் மகிழ்ச்சி

புதன், 25 ஜனவரி 2023 (19:24 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின் மும்பை நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற தகவல் அந்நகர மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
2020ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் இன்னொரு அலை ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இருப்பினும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மும்பை பெருநகர மாநகராட்சி  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்