மின்சார வாகனங்களில் தீ: உண்மை நிலை அறிய குழு அமைப்பு!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:57 IST)
மின்சார வாகனங்கள் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதை அடுத்து உண்மை அறியும் குழு அமைக்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் 
 
இது குறித்த உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார வாகன தயாரிப்பு பணியில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் அவ்வாறு காட்டப்பட்டது தெரியவந்தால் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்
 
குறைபாடு உள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்