ஜி எஸ் டி வரிக்குள் பெட்ரோல், டீசல்… விவாதிக்க தயாராக இருக்கிறோம் –நிர்மலா சீதாராமன் பேச்சு!

புதன், 24 மார்ச் 2021 (12:18 IST)
அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது தொடர்பாக விசாரிக்க தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நோக்கி உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசின் அதிகப்படியான வரியேக் காரணம் எனவும் அவற்றின் மீதான வரியை ஜி எஸ் டிக்குள் கொண்டுவரவேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன் ’அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை விவாதிக்கத் தயாராகவே இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்