இதன்படி இந்தியாவில் உள்ள டிவி சேனல்களில் பாகிஸ்தானை சேர்ந்த பேச்சாளர்கள், வல்லுனர்கள், விமர்சகர்கள் ஆகியவர்களை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை திட்டமிட்டு பிரச்சாரம் செய்யும் வேலையை பாகிஸ்தானை சேர்ந்த சில பேச்சாளர்கள் செய்து வருகின்றனர் என்றும், எனவே விவாதங்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பேச்சாளர்களை அழைக்க வேண்டாம் என்றும் இதனை அனைத்து செய்தி சேனல்களும், விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் டிவி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.