வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் !

புதன், 17 பிப்ரவரி 2021 (20:42 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியது.  ஆனால் இதை ஏற்காத விவசாயிகள் இந்த 3 வேளாண் சட்டங்கள் முழுமையாகத் தடைசெய்யப்படும்வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், நாளை நண்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் ரயில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்