பெண் மருத்துவர் படுகொலை.! நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்.!!

Senthil Velan

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (13:37 IST)
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் நாளை  மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 
 
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாளை நாடு முழுவதும் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: சாதிய பாடல்களை ஒளிபரப்ப கூடாது.! மீறினால் வழக்கு பாயும்.! காவல்துறை எச்சரிக்கை..!!
 
அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும் என்றும் அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்