வயிற்று வலியை போக்க கொடூரமான சடங்குகளில் ஈடுபட்ட தாய்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

வியாழன், 21 டிசம்பர் 2017 (17:12 IST)
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 11வயது மகளின் வயிற்று வலியை குணப்படுத்த கொடூரமான முறையில் பூஜை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பை அருகே உள்ள விரார் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரின் மகள் சானியா(11) வயிற்று வலியால் துடித்துள்ளார். மீனாட்சி சானியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் விபரீதமான பூஜையில் ஈடுபட்டுள்ளார். இதில் சானியா உயிரிழந்தார்.
 
மீனாட்சி வீட்டில் இருந்த வெளிவந்த சத்தங்களை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மீனாட்சி மற்றும் அவரது உறவினரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பிரேத பரிசோதனையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்களே அவரது மரணத்திக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்