கர்நாடகாவில் பெற்றத் தாயே மகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயது பெண்மணி ஒருவர் கணவனை பிரிந்து தனது 14 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அந்த மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமியின் பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி அளித்த புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தனது தாயே தன்னை வன்கொடுமை செய்து வருவதாக அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த பெண், தனது மகள் திருமணத்திற்கு பிறகு கணவனுடன் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்லி தந்ததாக கூறியுள்ளார். எனினும் சிறுமியின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் அவரது தாய் கைது செய்யபட்டுள்ளார்.
Edit by Prasanth.K