மாதவிடாய் காலங்களில் போடப்படும் மாத்திரைகள்! இந்திய மருந்தியல் ஆணையம் பகீர் எச்சரிக்கை!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:40 IST)
பெண்கள் மாதவிடாய் காலத்தில் Meftal எனப்படும் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் நிலையில் இந்தியா மருந்தியல் ஆணையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.


 
இந்தியாவில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை சமாளிக்கவும், முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வலி நிவாரணியாக meftal என்னும் மாத்திரியை பயன்படுத்தி வருகின்றனர். மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எளிதாக கிடைத்துவிடும் இந்த மாத்திரை சில மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது.

அதில் இந்த மாத்திரையை அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரைகளை உட்கொண்ட இரண்டு முதல் எட்டு வாரங்களுக்குப் பின் தோன்றும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் வலி ஏற்படும்போது தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்