பின்னர், வரப்பிரசாத்தின் வங்கி கணக்கை வைத்து போலீசார் விசாரித்ததில், விஜயவாடாவைச் சேர்ந்த நாகபூஷணா என்பவர் பெண் போல பேசி ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் அந்த நாகபூஷணா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 57 பேரிடம் ஃபேஸ்புக்கில் இதுபோன்று பெண்ணாக நடித்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் நாகபூஷணாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.