தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணை, அறுவை சிகிச்சை அரங்கின் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீட்சித் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், நோயாளியை மயக்கமடைய செய்யும் ஊசி போட்டுவிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறை தீட்சித் மீது பாலியல் வன்முறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கரீம்நகர் காவல் ஆணையர் கௌஸ் ஆலம், இந்த சம்பவம் நடந்த அறை சீல் வைக்கப்பட்டு, தடயவியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்தவுடன் முழு விவரங்களும் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.