ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம்

வெள்ளி, 12 நவம்பர் 2021 (21:24 IST)
ஹோட்டல்களில் முட்டை உள்ளிட்ட இறைச்சிகளை வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வதோத்ரரா நகரில் உள்ள ஹோட்டல்களில்  முட்டை உள்ளிட்ட இறைச்சி உணவுகளை வெளியில் தெரியும்படி இனிமேல் வைக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சியை வெளியில் வைப்பதால் உணவுகள் புண்படுகிறது என சேர்மன ஹிதேந்திர படேல் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்