மத்திய அரசை விமர்சித்து வந்த மனோஜ் திவாரி… மம்தா கட்சியில் இணைந்தார்!

புதன், 24 பிப்ரவரி 2021 (15:32 IST)
கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா பானர்ஜியின் திருனாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து கூறிய கிரிக்கெட் வீரர்களைக் கலாய்க்கும் விதமாக சக கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி ‘“நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை. பொம்மலாட்டத்தை காண எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக பதிவிடுவதைதான் அவர் அவ்வாறாக குறிப்பிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது’ எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

அதேபோல இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து அவர் ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளது. இக்கட்டான சூழலிலும் பெட்ரோல் சதம் அடித்துள்ளது. அதற்கு இணையாக டீசலும் நன்றாக பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளது. சாமான்ய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதானதல்ல. ஆனால் அதை இருவரும் சாதித்துள்ளனர்’ என அரசை கேலி செய்யும் விதமாக டிவீட் செய்தார்.

இதுபோல மத்திய அரசையையும் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த அவர் இன்று மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து தன்னை திருனாமூல் காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்