கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மீது கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என மம்தா குல்கர்னி மறுத்து வந்தார்.
இந்நிலையில் அவர் மீதான போதைப் பொருள் வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தானே காவல் துறையினர், ”மம்தா குல்கர்னி மீதான போதை பொருள் வழக்கி்ல் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதனால் தற்போது அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.