எம்எல்ஏவாக பதவியேற்றார் முதல்வர் மம்தா

வியாழன், 7 அக்டோபர் 2021 (15:47 IST)
பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவியேற்றார். 
 
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார் என்பதும் அவரது கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற பவானிபுர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் என்பவர் போட்டியிட்டார். 
 
இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்து தான் மம்தாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பதும் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்ற நிலை இருந்த நிலையில்  பவானிபூர் தொகுதியில் வெற்றிப் பெற்றார்.
 
இந்நிலையில் தற்போது பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவியேற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி உள்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்