தொழில்கள், எரிசக்தி, தொழிலாளர் மற்றும் சுரங்கத் துறை இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகங்கள் இனி இரவு, பகல் என எல்லா நேரமும் திறந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்க தேர்வு செய்யும் வணிக நிறுவனங்களுக்கான முக்கிய நிபந்தனை என்னவென்றால், அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் தொடர்ச்சியாக 24 மணி நேரம் கட்டாய வாராந்திர ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.