மகாராஷ்டிரா அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கிய முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதை மாற்றியமைத்துள்ளது. இனி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்திக்கு பதிலாக மற்றொரு இந்திய மொழியை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தியை கட்டாயமாக்கும் முடிவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்திருந்தது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள் மற்றும் மொழி ஆலோசனைக் குழுவின் எதிர்ப்புகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது புதிய திருத்தப்பட்ட மொழி கொள்கை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.