இந்தி இனி தேவையில்லை.. தமிழ்நாடு பாணியில் மகாராஷ்டிரா அரசு.. சூப்பர் அறிவிப்பு..!

Siva

புதன், 18 ஜூன் 2025 (12:23 IST)
மகாராஷ்டிரா அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கிய  முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதை மாற்றியமைத்துள்ளது. இனி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்திக்கு பதிலாக மற்றொரு இந்திய மொழியை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
 
மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தி பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும். ஆனால் இனிம்ர்ர்ல், மாணவர்கள் விரும்பினால் வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.
 
ஒரு வகுப்பில் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி அல்லாத வேறு மொழியை தேர்வு செய்தால், அதற்கென ஆசிரியர் நியமிக்கப்படுவார். 20க்கும் குறைவான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும்.
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயப் பாடமாக இருக்கும்.
 
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தியை கட்டாயமாக்கும் முடிவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்திருந்தது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள் மற்றும் மொழி ஆலோசனைக் குழுவின் எதிர்ப்புகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது புதிய திருத்தப்பட்ட மொழி கொள்கை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்