164 பேர் பலி; 100க்கும் அதிகமானோர் மாயம்! – மகாராஷ்டிராவை உலுக்கும் மழை, வெள்ளம்!

செவ்வாய், 27 ஜூலை 2021 (08:43 IST)
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 100க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தொடர்ந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் இதுவரை 164 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்