உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள் யார் யார்?

திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:34 IST)
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்க இந்திய அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவும், அந்த நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. 
 
இதனைத்தொடர்ந்து உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கு செல்கிறார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஸ்லோவாக்கியா செல்கிறார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு செல்கிறார்,  மத்திய அமைச்சர் வி.கே.சிங் போலாந்து செல்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்