பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் வைத்தால் கட்சிகளின் வாக்கு சதவீதம் என்ன என்பது குறித்த கருத்து கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில், அதில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவால் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், பாஜக கூட்டணியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், இப்போது தேர்தல் வைத்தால் முழு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.