சைக்கிள் பேரணி சென்ற பிரபலத்தின் மகன் கீழே விழுந்தார்

வெள்ளி, 27 ஜூலை 2018 (15:47 IST)
பாரதிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ், சைக்கிள் பேரணியில் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி கைதாகி தற்பொழுது சிறையில் இருக்கும் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் பேரணி நடைபெற்றது.
சைக்கிளில் பேரணி சென்றுகொண்டிருந்த தேஜ் திடீரென சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்