மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் திடீர் மரணம்...

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (10:05 IST)
மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு காலமானார்.

 
அவருக்கு தற்போது வயது 95. 1924ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவர் பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியர் ஆவார்.
 
இவர் நேருவுக்கு பிறகு, தீர்ப்பு முதலிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  வயது முதிர்வு மற்றும்  உடல்நலக்கோளாறுகள் காரணமாக நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் குல்தீப் நய்யார் மரணமடைந்தார்.
 
அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்