AI தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்ட நிலையில், நீதித்துறையிலும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வழிகாட்டுதல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வழக்கின் தீர்ப்பு முடிவை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளை தயாரிக்கவோ AI கருவிகளை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவற்றில் பிழைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், முக்கியமான தகவல்களும் வெளியே கசியும் அபாயம் உள்ளது.
ஒருவேளை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவற்றை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட AI கருவிகளை பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக ஐடி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்