வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் வங்கிதான் பொறுப்பு: அதிரடி உத்தரவு..!

சனி, 19 ஆகஸ்ட் 2023 (10:29 IST)
ஒரு வாடகையாளரின் வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் அதற்கு வங்கி தான் பொறுப்பு என கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடி செய்து பணம் எடுத்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கில்  கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் அதற்கு அந்த வங்கி தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளது. 
இந்த தீர்ப்பு சம்பந்தப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்