நேற்று மாலை வாங்கிய லாட்டரிக்கு இன்று ரூ.25 கோடி பரிசு: ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சி!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (20:09 IST)
நேற்று மாலை வாங்கிய லாட்டரிக்கு இன்று ரூ.25 கோடி பரிசு: ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சி!
நேற்று மாலை வாங்கிய லாட்டரி சீட்டு இன்று 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததை அடுத்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்
 
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு லாட்டரி சீட்டு குலுக்கல் இன்று நடைபெற்றது. இந்த குலுக்களில் 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது.
 
இதனை அடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததை அடுத்து ஆட்டோ டிரைவருக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார். நேற்று மாலை தான் இந்த லாட்டரி டிக்கெட் வாங்கினேன் என்றும் 25 கோடி ரூபாய் பணத்தை வைத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்றும் குடும்பத்தாருடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அவருடைய அதிர்ஷ்டத்தை எண்ணி அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்