’சோறு கூட போடல?’ கர்ப்பிணி மனைவி சித்ரவதை செய்து கொலை! – கணவர் குடும்பம் கைது!

புதன், 23 நவம்பர் 2022 (13:10 IST)
கர்நாடகாவில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி பெண்ணை கணவனின் குடும்பம் சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் 21 வயதான சந்திரகலா. இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்னதாக மோகன் குமார் என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு மோகன் குமார் வீட்டில் அதிகமாகவே வரதட்சணை கேட்ட நிலையில் சந்திரகலாவின் பெற்றோர் அதையும் எப்படியோ கொடுத்துள்ளனர்.

திருமணமாகி சில மாதங்கள் ஆன நிலையில் சந்திரகலா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு சந்திரகலாவை அவரது கணவர் மோகன் குமார் மற்றும் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர். கர்ப்பிணியான சந்திரகலாவுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றையும் வழங்காமல் கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சந்திரகலா இதை தனது சகோதரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். இது தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த மோகன் குமார் மனைவியை கொலை செய்து அருகே இருந்த காட்டில் புதைத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் போலீஸார் மோகன் குமார் குடும்பத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்