கர்நாடக முதல்வர் ராஜினாமா?

வியாழன், 22 ஜூலை 2021 (18:47 IST)
கர்நாடக மாநிலத்தில்  பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,  முதல்வர் எடியூரப்பா முதல்வர் பதவியை விட்டு விலகுவதாக அவர் பேட்டியளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடியூரப்பாக் கர்நாடக மாநில முதல்வராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் இரண்டுபேர் அவருக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த  முதல்வர் எடியூரப்பா,  தான் முதல்வராகப் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதால் வரும் 26 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்வதாகக் கூறினார். மேலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா தன்னிடம் கூறுவதற்கு ஏற்ப தான் செயல்படப் போவதாகவும்,  கட்சியில் உள்ள உட்பூசல் காரணமாக கட்சி மேலிடன் என்னை ராஜினாம செய்யும்படி கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்