பரிசோதனையில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி - ஐ.சி.எம்.ஆர்

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (17:22 IST)
சீன நாட்டில் உள்ள வூஹான் மாகாணத்தில்  இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  அங்குள்ள ஒரு கொரொனா வைரஸ் பாதித்த வௌவால் சாப்பிட்ட ஒரு ஆப்பிளை ஒருவர் சாப்பிட்டதால் அவர் மூலமாய் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள  இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரீசர்ஸ் நிறுவனம் கொரோனா   குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில், தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா  இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், பரிசோதனையில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பதை உறுதிசெய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்