வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:22 IST)
2021-2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் 3 மாதங்களுக்கு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது 
 
2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது வருமானவரித் துறையில் புதிய இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வருமான வரி கட்டுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்