தற்போது, உத்தர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற நிலையில், அவர்களை காணவில்லை என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே ஐந்தாம் தேதி திருமணம் நடந்த இந்த தம்பதிகள், தேனிலவுக்காக சிக்கிம் மாநிலத்திற்கு மே 24ஆம் தேதி சென்றனர். இவர்கள் சென்ற வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பெய்த கனமழை காரணமாக லேசான நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அப்போது அந்த வாகனம் திடீரென நதியில் விழுந்ததாகவும் தெரிகிறது.
இந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாகனத்தில் சென்ற புதுமண தம்பதிகளை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.