மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரமாகும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 26 வரை கடல் பிரதேசங்களில் பரபரப்பான நிலை நிலவுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், அவர்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மே 21 முதல் 26 வரை, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையிலுள்ள பகுதிகளில் 11 முதல் 20 செ.மீ. வரை மற்றும் மஞ்சள் எச்சரிக்கையிலுள்ள பகுதிகளில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.