5 மாத கர்ப்பிணி கூட்டு பலாத்கார வழக்கு: தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் விடுதலை!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:16 IST)
5 மாத கர்ப்பிணியை 11 பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இன்று 11 பேர்களும் விடுதலை ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் போது ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு என்பவர் 11 பேர்களால் கூட்டு பாலியல் கொடுமை செய்யப்பட்டார்
 
இதனையடுத்து 11 பேர் மீதும் வழக்கு தொடரப்படும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது 11 பேருக்கும் குஜராத் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை அளித்து உள்ளது. தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது 11 பேரையும் குஜராத் அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்