வரி ஏய்ப்பு செய்தால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து- அமைச்சர் மூர்த்தி

சனி, 13 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்பவர்களின்  ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய வரி மற்றும்  பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு, அலுவலர்களுக்கான  சீராய்வு கூட்டம்  நடைபெற்றது.

இந்த அலோசனைக் கூட்டத்திற்குப் பின்,செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: 

அரசுக்கு வருவாயை உயர்த்தும் வாகியில் கோட்ட வாரியாக ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது.  பாஜக மத்திய அரசில் பொறுப்பேற்ற பின் அரசுக்கு வரி வருஆய் 61 %, பத்திரப்பதிவு வருவாய் 70% அதிகரிதிதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் ஆண்டு  நிதிவருவாயை உயர்த்துவதற்காக நடப்பு ஆண்டில் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவு, வர்த்தகம் செய்பவர்கள்  வரி ஏய்ப்பு செய்தால், ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்