புதிய ரூபாய் நோட்டு பிரச்சனையால் திருமணம் நின்றது - மணமகள் கண்ணீர்

சனி, 26 நவம்பர் 2016 (11:39 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால், திருமணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
 
உத்தரபிரதேச மாநிலம் , மூசாபர் நகரில் இன்று திருமணம் நடக்கவிருந்தது. இதனால் திருமண வேலைகளில் இருவீட்டாரும் மும்முரமாக  ஈடுபட்டுருந்தனர். இந்தநிலையில், திருமணத்திற்கு வரதட்சனையாக கேட்ட கார் மற்றும் புதிய ரூபாய் நோட்டை தராததால், திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் தெரிவித்தார். இதனை கேட்ட மணமகள் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மணமகள் கதறி அழுதார். மணமகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்னாள் மணமகன் மறுப்பு தெரிவித்தால் திருமண வீடு சோகமானது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்