இளம்பெண்ணை கற்பழித்து 4வது மாடியிலிருந்து தூக்கி வீசிய காதலன்....

திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:13 IST)
தலைநகர் டெல்லியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.


 

 
டெல்லியின் புறநகர் பகுதியான ரோகினி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடியில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், அரை குறை ஆடையுடன் தூக்கி வீசப்பட்டார். இதனால், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
 
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் காதலர் தீபக் என்பவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, 4வது மாடியிலிருந்து தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. இதனால், போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஆனால், தங்கள் பெண்ணின் இந்த நிலைமைக்கு,  தீபக் மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அந்த வீட்டில் இருந்திருக்கலாம் என அப்பெண்ணின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்