கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் என்பவரை, அவரது மனைவி பல்லவி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஓம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகிய இருவருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதம் கடுமையாக மாறிய நிலையில், சமையலறையில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்து ஓம் பிரகாஷின் கை, கால், கழுத்து, தலை மற்றும் பின்புறத்தில் பல்லவி குத்தியதாகவும் தெரிகிறது.